2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் தினமுரசு செய்தியாளர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்தில் தினமுரசு பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளார்.

பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த கே.விசிந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

அச்சுவேலி, தொண்டமாறு தம்பனை சந்திப் பகுதியிலேயே  நேற்று புதன்கிழமை இரவு இந்த தாக்குதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே  வழிமறித்து தாக்கியுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் தெரிவித்தார்.

உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாக்குதலுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான நபரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கமலேந்திரன்) மற்றும் பருத்தித்துறை அமைப்பாளர் ரங்கன் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • aj Thursday, 14 March 2013 06:55 AM

    ஆசியாவின் அதிசயம்.
    ஆகா மொத்தம் இந்த நாட்டில் உண்மையை பேச, மக்களுக்கு செய்தி சொல்ல ஓர் ஊடக நண்பர்களும் இருக்க கூடாது. எல்லாமே அவர்களுக்கு ஒட்டு ஊதவேண்டும் இல்லாவிட்டால் இப்படி தான் அடி உதய். சூடு.
    நாட்டின் தற்போதைய நிலை மிக தெளிவாக கோடிட்டு காட்டுகிறது...

    Reply : 0       0

    vallarasu Thursday, 14 March 2013 07:35 AM

    மன்னிக்கவும், இனந்த்தெரியாதவர்கள் அல்ல‌... இனவாதிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .