2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ்.விபத்தில் சகோதரர்கள் இருவர் பலி

Kanagaraj   / 2013 மார்ச் 14 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆணைக்கோட்டை வடக்கைச் சேர்ந்த கனகரத்தினம் பிரதீப் (வயது 23), நெடுந்தீவைச்சேரந்த தியாகராஜா மோகனதீபன் (வயது 16) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி பாலத்தடியிலேயே இந்த விபத்து நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த கனகரத்தினம் பிரதீப் இன்றுகாலை மீட்கப்பட்ட நிலையில் தியாகராஜா மோகனதீபனின் சடலம் நீரில் மூழ்கியிருந்த நிலையில் பிற்பகல் 1 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்விருவரும் வன்னிநோக்கி சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .