2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு உதவ தயார்: கனடா உயர் ஸ்தானிகர்

Super User   / 2013 மார்ச் 20 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்க கனடா அரசாங்கம் தயாராகவுள்ளது என கனடா உயர் ஸ்தானிகர் செனற்ர ஹச் டி சீஹல் உறுதியளித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா உயர்; ஸ்தானிகர் இன்று  யாழ். மாவட்ட செயலாளர்  சுந்தரம் அருமைநாயகத்தை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது, யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் மற்றும் தற்போது மேற்கொள்ளும் அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

அதேNளை, யாழ். மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் மின் பாவனை வீதத்தினை விட போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் மின்சார பாவணை அதிகரித்துள்ளதா என கனடா உயர் ஸ்தானிகர் செனற்ர ஹச் டி சீஹல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மாவட்ட செயலாளர் பதிலளிக்கையில், 84 சதவீதம் வீட்டு மின்சார பாவனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கால பகுதிக்குள் மிகுதி 16 சதவீத வீட்டு மின்சார பாவனைகள் பூர்த்தியாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் வீட்டு தேவைகள் அதிகமாக காணப்படுகின்றதாகவும், தற்போது 1/4 பங்கு வீட்டுத் தேவைகள் இந்திய அரசாங்கத்தினால் மற்றும் இலங்கை அராசங்கத்தினால் பூர்த்தியாக்கப்பட்டு வருகின்றதாகவும் மிகுதி 3/4 பங்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான தேவைகள் இருப்பதாகவும் அதற்கான வாய்ப்புக்களை  கனடா அரசாங்கம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை மேற்கொண்டு சாதகமான பதில் தெரிவிப்பதாக கனடா உயர் ஸ்தானிகர் செனற்ர ஹச் டி சீஹல் உறுதியளித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .