2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

துரித கதியில் இடம்பெறும் முகமாலை மிதிவெடி அகற்றல் பணி

Menaka Mookandi   / 2013 மார்ச் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். முகாமாலைப் பகுதியில் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்த முகாமாலை பகுதி விடுதலைப்பபுலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு ஒரு முக்கிய பகுதியாக இருந்துள்ளது.

தற்போது யுத்தம் முடிக்கு வந்ததையடுத்து குறித்த பகுதியில் ஹலோ ட்ரஸ்ட்; நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் செயற்பாடு கடந்த வருடம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏ௯ பிரதான வீதியில் இருமருங்கும் 1.7 கிலோ மீற்றர் நீளமான கொண்ட பிரதேசத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் பாத்தலே மேயு தெரிவித்துள்ளார்.

இந்த மிதிவெடி அகற்றும் பணியின் போது 2,286 தனிநபர் மிதிவெடி, 1,012 ரங்கன் மிதிவெடி (விடுதலைப் புலிகளின் தயாரிப்பு) 141 வாகன எதிர்ப்பு மிதிவெடி மற்றும் 229 வெடிக்காத வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மிதிவெடி அகற்றும் மனித நேயச் செயற்பாட்டில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 170 ற்கும் மேற்பட்ட இருபாலாரும் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .