2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அனுமதியின்றி நடத்தும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும்: யாழ். மேயர்

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'யாழ். மாநகரசபை எல்லைக்குள் மாநகர சபையின் உரிய அனுமதிபெறாமல் இயங்கிவரும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டுமென்றும், மீறி நடத்தப்படும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.

'யாழ். மாநகரசபை எல்லைக்குள் சபையின் அனுமதி பெறாமல் பல விடுதிகள் தனிப்பட்டவர்களால் நடத்தப்பட்டு வருகின்றதாகவும் அவ்விடுதிகளில் சுகாதாரச் சீர்கேடு கலாசாரச் சீர்கேடு அதிகரித்து வருவதாகவும் விடுதிகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் சுற்றாடலில் வசித்து வரும் பொதுமக்களிற்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் பல முறைப்பாடுகள் யாழ். மாநகரசபைக்கு கிடைத்துள்ளன.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் கண்காணிக் வேண்டியது மாநகர சபையின் கடமையாதலால் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள விடுதிகள் சம்மந்தமாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.

'இதனால் அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் விடுதிகளை மூடுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சபையின் அனுமதியின்றி எத்தகைய விடுதிகளும் நடாத்தப்படக் கூடாதென்றும் மீறி நடாத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

  Comments - 0

  • YOGA.S Friday, 29 March 2013 04:17 PM

    சபையின் அனுமதியா அல்லது உங்கள் தனிப்பட்ட அனுமதியா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X