2025 ஜூன் 18, புதன்கிழமை

சமாதான பாத யாத்திரை யாழில் நிறைவு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 31 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,-சுமித்தி தங்கராசா


தெற்கிலிருந்து வடக்கிற்கான சமாதான பாத யாத்திரை  இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது.

சமாதானத்தை உறுதிப்படுத்தும் முகமாக கதிர்காமத்திலிருந்து கடந்த 6ஆம் திகதி இந்த சமாதான பாத யாத்திரை ஆரம்பமாகியிருந்தது.

கடந்த 25 நாட்கள் சமாதான பாத யாத்திரை பயணத்தின்; பின்னர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சமாதான பாத யாத்திரை  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து ஆரம்பமான இந்த சமாதான பாத யாத்திரை, யாழ். நாகவிகாரையை வந்தடைந்தது.

நாகவிகாரையை வந்தடைந்த இந்த சமாதான பாத யாத்திரையை  வடமாகாண ஆளுநர்; ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து இந்த சமாதான பாத யாத்திரை ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டுக்கோபுர வீதி ஊடாக வைத்தியசாலை வீதியைச் வந்தடைந்து அங்கிருந்து காங்சேன்துறை வீதியூடாக யாழ். கோட்டையை வந்தடைந்தது.

இந்த சமாதான பாத யாத்திரைக்கு ஜனாதிபதி செயலகம், இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளனம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு ஆகியன ஆதரவு வழங்கியிருந்தது.

இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா மலேசியா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த சமாதான பாத யாத்திரையில் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .