2025 ஜூன் 18, புதன்கிழமை

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட மூருவருக்கு பிணை

Super User   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் மூருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் என்பவரை அடித்தும் வாளால் வெட்டியும் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் தலா 2 லட்சம் பெறுமதியான 2 ஆள் பிணையிலும் செல்ல நீதிபதி இன்று அனுமதித்தார்.

இந்த மூவரையும் மாதத்தின் கடைசி ஞாயிறுகிழமை காலை 9.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சர்மினி விக்னேஸ்வரன் மற்றும் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .