2025 ஜூன் 18, புதன்கிழமை

'கடல் வளங்களை பாதுகாப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்'

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

எமது கடல் வளங்களை பாதுகாப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கடல் சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

எமது கடற்பகுதியில் பெருமளவான கடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க மக்கள் முன்வர வேண்டும். இந்த கடல் சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் மூலம் உடலுக்கோ, உயிருக்கோ எதுவிதமான பாதிப்பபும் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்த கடல் சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பது தொடர்பில் பட்டதாரி பயிலுநர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன்  ஊடாக எமது வளங்கள் பாதுகாக்கப்படுவதுடன்,  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .