2025 ஜூன் 18, புதன்கிழமை

விடுதி பிரச்சினை ஆராய்வதற்கு குழு நியமனம்

Super User   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய விடுதி பிரச்சினைகளை ஆராய்வதற்கு 18 பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா இன்று தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் விடுதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த முரண்பாட்டினை தீர்க்கும் முகமாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 15 வைத்தியர்கள்  உட்பட வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் அடங்கலாக 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் தலைவராக சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் என். சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவினர் விடுதி பிரச்சினைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பணித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .