2025 ஜூன் 19, வியாழக்கிழமை

காதை கடித்தவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 மே 29 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மதுபோதையில் காதைக்கடித்தவரையும், மற்றொருவரையும்; 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 7 பேரைக் கொண்ட குழுவினர் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த தர்க்கத்தின் போது அருகில் இருந்த நண்பனின் காதை இளைஞர் ஒருவர் கடித்துள்ளார்.

காதில் கடி வாங்கியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று குறித்த இளைஞர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, இக்குழுவில் இருந்த மற்றொருவரும் யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இருவரையும் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியவேளை, இருவரையும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .