2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வெடி விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்

Menaka Mookandi   / 2013 மே 31 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம், மீசாலை, கல்குவாரி பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இவ்வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், மீசாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணன் ரங்கநாதன் (வயது 45) என்பவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீசாலை கல்குவாரியில் கல் உடைக்கும் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே இவ்வெடி விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .