2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'இராணுவ குடியேற்றத்திற்காகவே வலி.வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டன'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

'இராணுவ குடும்பங்களை குடியேற்றுவதற்காகவே வலிகாமம் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை' என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

கட்டுவன் பகுதியில் பொதுமக்களின் வீடுகள் உடைக்கப்படுவதினை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் திங்கட்கிழமை (28) காலை சென்றிருந்தனர்.

அங்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக சரவணபவன் எம்பியிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'இராணுவத்தினரால் தொடர்ச்சியாக உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஜனநாயக வன்முறை. இது தொடர்பில் பார்வையிடச் சென்றவேளை அங்கு வந்த இராணுவ அதிகாரி ஒருவர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையiயும் மீறியுள்ளார்.

இராணுவம் ஏன் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்கின்றது என நாம் கேட்டதிற்கு,
 
'யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் வெளியேறி உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் முகாம்கள் அமைக்கும் நோக்கில் இந்த வீடுகள் இடிக்கப்படுகன்றன. இந்த காணிகள் யாவும் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரித்துள்ளது.

வலி வடக்கில் காணிகளை இழந்த பொதுமக்களுக்கு நஷ;ட ஈடு வழங்குவதற்காக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என அந்த இராணுவ அதிகாரி பதலளித்தார்.

அத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ள மக்களிற்கு வேறு மாற்றுக்காணிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' எனவும் இராணுவ அதிகாரி கூறினார்.

இந்நிலையில் அரசாங்கம் தமிழ் மக்களைப் படிப்படியாகக் குடியேற்றுவதாக அறிவித்திருந்த நிலையில், நீங்கள் இவ்வாறு இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவிக்கின்றீர்களே என்று நான் கேட்டதற்கு, நீங்கள் அரசாங்கத்திடம் சென்று தான் கேட்கவேண்டும் என்று இராணுவ அதிகாரி பதிலளித்ததாக சரபணபவன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .