2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வலி. வடக்கு விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருக்கு எடுத்துரைத்தேன்: சி.வி

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

வலி.வடக்கு விவகாரம் தொடர்பில் அமெரிக்க தூதுவருக்கு நான் எடுத்துரைத்தேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

அந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இந்த பிரச்சினை தொடர்பாக நான் தூதுவருக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளேன் என்றார்.

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5இ000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவினால் உதவிகள் மேற்கொள்ளப்படும். வட மாகாணத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன்இ வட மாகாணத்தில் முதன்முறையாக முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டமை சந்தோசமளிக்கின்றது. வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளினை அமெரிக்க அரசாங்கம்  வழங்கும்' என்றார்.

இதேவேளைஇ வலி. வடக்கு வீடுகள் உடைப்பு பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொள்ளப்படும்  எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .