2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சாவகச்சேரியிலுள்ள ஐந்து நூலகங்களுக்கு விருது

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள ஐந்து நூலகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் கடந்த செவ்வாய்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போதே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் 2012ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் சிறப்பாக செயற்பாட்டமைக்காக சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள கைதடி, நாவற்குழி, சரசாலை, மிருசுவில் மற்றும் வரணி ஆகிய இடங்களிலுள்ள ஐந்து நூலகங்களிற்கு இந்த நிகழ்வில் விருது வழங்கப்பட்டது.

இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான சரத் ஏக்க நாயக்க மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .