2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆலயப் பொருட்களை விற்க முற்பட்டவர் தப்பியோட்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


ஆலய பொருட்களை இரும்பு கடையொன்றுக்கு விற்க முற்பட்டவர் தப்பியோடிய சம்பவமொன்று ஓட்டுமடம் அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.

அராலி வீதியில் அமைந்திருக்கும் இரும்பு விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் கோவில் பொருட்களை விற்பனை செய்ய முயன்றவேளை, அதனை கடையின் உரிமையாளர் வாங்க மறுத்துள்ளார்.

இந்நிலைமையினை அவதானித்த பொதுமக்கள்  இளைஞனை பிடிக்க முயன்றபோது குறித்த இளைஞன் தான் கொண்டு வந்த பொருட்களை போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரும்புக்கடை உரிமையாளர் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து, பொலிஸார் மேற்படி பொருட்களை மீட்டு பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .