2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கல்வியங்காடு சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்குநேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில்  பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சிறிஸ்கந்தராஜா (வயது 62) என்பவரே மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .