2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வியாபார நிலையத்தில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


யாழ். வடமராட்சி குஞ்சர் கடைப் பகுதியிலுள்ள  வியாபார நிலையமொன்றிலிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை மேற்படி வியாபார நிலையத்தின் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும்
கொள்ளையிடப்பட்டுள்ளன.

15,000 ரூபா பணம்,  5 சிகரெட் பைக்கட்டுக்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை மேற்படி வியாபார நிலையத்தின் உரிமையாளர் வியாபார நிலையத்தை திறப்பதற்காகச் சென்றபோது வியாபார நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி வியாபார நிலையத்தின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .