2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வலி.வடக்கில் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

வலி வடக்கில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளமையினால், அப்பிரதேசங்களில் வசித்து தற்போது இடம்பெயர்ந்த நிலையிலுள்ள பொதுமக்களை அவர்களின் பிரதேசங்களில் மீளக்குடியேறுவதற்கு தங்கள் தங்கள் கிராமசேவகர்கள் ஊடாக  தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (10) தெல்லிப்பளையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக அரச அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'பலாலி கிழக்கு (ஜே.253), பலாலி வடக்கு (ஜே.254), வளளாய் பகுதி (ஜே.284) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசித்து தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

ஆகவே, ஜே.253, ஜே.254 கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும், ஜே.284 கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்திலும் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன், பதிவுகளை மேற்கொள்ளவதற்கு குடும்ப அட்டை மற்றும் அவர்களின் காணிகளின் உறுதிகள் ஆகியவற்றினைக் கொண்டுச்செல்ல வேண்டும்.

மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் மற்றும் அத்தியாவசித் தேவைகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும்' என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .