2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கனேடியத் பிரதிநிதிகள் அஞ்சலி

Kanagaraj   / 2013 நவம்பர் 12 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதிநிதிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆனையிறவுப் பகுதியில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தந்த கனேடிய பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரை சந்திக் கலந்துரையாடினர்.

சந்திப்பின் பின்னர் ஏ – 9 வீதியின் வழியாக கிளிநொச்சி செல்லும் வழியில் ஆனையிறவில் யுத்த வெற்றி நினைவுத்திடல் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் உள்ளே சென்று, அங்கு வைத்து யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் கொண்டு வந்திருந்த மலர்வளையத்தினை தம்கூடவே எடுத்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .