2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி – கனரக வாகனம் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 09 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன், கனகரத்தினம் கனகராஜ்


முச்சக்கரவண்டி - கனரக ரக வாகனமும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்ததுடன், அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கொடிகாமம் வீதி நெல்லியடியில் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியான கரவெட்டி மேற்கினைச் சேர்ந்த எஸ்.வேலப்பா (65) என்பவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமத்திலிருந்து நெல்லியடிக்கு கற்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த கனரக வாகனமும், நெல்லியடியிலிருந்து கொடிகாமத்திற்கு பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கனரக வாகனத் சாரதியினைக் கைது செய்த நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், நெல்லியடி புறாப் பொறுக்கி என்னும் இடத்தில் இன்று (09) பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் உடுப்பிட்டிப் பிரதேசத்தினைச் சேர்ந்த இ.இராகுலன் என்பவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .