2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் குண்டு, ரவைகள் மீட்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.கோப்பாய் வசந்தபுரம் பகுதியிலிருந்து இன்று (14) காலை மோட்டார் குண்டு ஒன்றும்  துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் முன்னாள் உள்ள தோட்டக் காணியினுள் குண்டுகள் இருப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் 80 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்றையும், ரி - 56 துப்பாக்கி ரவைகள் 96 யையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .