2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். உரும்பிராய் சந்தியில் கன்டர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியமையினால் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலடி வீதி ஊரெழு மேற்கைச் சேர்ந்த 73 வயதான குமாரசாமி பாலசுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மருதனார் மடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் உரும்பிராய்க்கு வந்து கொண்டிருந்த மேற்படி வயோதிபரை பின்னால் வந்த கனரக வாகனம் உரும்பிராய்ச் சந்தியில் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .