2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொடிகாமத்தில், பொலிஸாரை தாக்க முயற்சி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

விசாரணையொன்றுக்காக சென்றிருந்த பொலிஸார் இருவர் மீது இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளது.

இந்த சம்பவம் கொடிகாமம், தென்மராட்சி பாலாறு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனத்தில் நேற்று சனிக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார் அந்த வாகனத்தினை கைப்பற்றுவதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த சிலர் வீதிக்கு குறுக்காக கட்டைகளைப் போட்டு பொலிஸ் வாகனத்தை மறித்து அந்த வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தனர்.

பொலிஸ் வாகனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொலிஸார் இருந்தமையினால் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸாரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அதற்குள் குறித்த டிப்பர் வாகனம் மணலை கொட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. வீதியை மறித்தவர்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்நிலையில், மேற்படி பிரதேசத்தில் வேறு ஒரு சம்பவம் தொடர்பில்  விசாரணை செய்வதற்காக பொலிஸார் இருவர்இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளனர்.

அவ்வேளையில் அங்கு குழுமியிருந்த இளைஞர்கள் குழுவொன்று, நீங்கள் தானே மணல் அள்ளுவதைத் தடுக்க நேற்று வந்தனீர்கள் என கேட்டுக்கொண்டே; பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு தப்பிச்சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Sunday, 15 December 2013 01:53 PM

    யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .