2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். இந்துமா சபையின் பாதை யாத்திரை

Super User   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


 திருவெம்பாவை முன்னிட்டு யாழ். இந்துமா சபையினால் பாதை யாத்திரையொன்று இன்று (16) காலை நடத்தப்பட்டது. சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியத்தின் தலைவர் வாசுதேவக்குருக்களின்; ஆசியுடன் இப்பாதையாத்திரை சித்தன்கேணி சிவன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

தொடர்ந்து,  சித்தன்கேணி பிள்ளையார் ஆலயம், தொல்புரம் வழக்கம் பரை முத்துமாரியம்மன் ஆலயம், சுழிபுரம் பெரிய புலோ ஞானவைரவர் ஆலயம், சுழிபுரம் மேற்கு அரிஹர புத்திர ஐயனார் ஆலயம், சுழிபுரம் பறளை விநாயகர் ஆலயம், முருகன் ஆலயம், பனிப்புலம் முத்து மாரியம்மன் ஆலயம், சம்பிலதுறை சம்பு நாதேஸ்வரர் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், காரைநகர் வலந்தலை மட்டத்துக்கரை முத்துமரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களிலூடாக காரைநகர் ஈழத்து சிதம்பரம் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

இப்பாதை யாத்திரை சுமார் 18 கிலோ மீற்றர் தூரம் நடைபெறகின்றது. இப்பாதயாத்திரையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலி.மேற்கு பிரதேச சபை தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.நடனேந்திரன், இந்து சமய  அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .