2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விடுதிகளுக்கு நோயாளர்களை கொண்டு செல்வதில் அவதி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர்கள் மேற்கொள்ளும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (12) தொடக்கம் 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதினால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை தொண்டர்களே இதுவரை காலமும் விடுதிகளுக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்கள் தற்போது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதினால் நோயாளர்களின் உறவினர்களே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நோயாளிகளை விடுதிகளுக்குக் கொண்டு செல்கின்றனர். 

அத்துடன், சத்திர சிகிச்சை பிரிவு, கதிரியிக்கப் பிரிவு ஆகியவற்றிற்கு நோயாளர்களை தாதியர்களே தற்போது கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .