2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தென்மராட்சியில் பொலிஸார் சோதனை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

தென்மராட்சி பாலாறு பகுதிகளிலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை (16) பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகள் தலைமையில், சுன்னாகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட பொலிஸார் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்று முன்தினம் (14) மணற்கொள்ளையினை தடுக்கச் சென்ற பொலிஸ் வாகனத்தினை அங்கிருந்த சிலர் வீதித்தடைகள் போட்டு மணல் கடத்திய வாகனத்தினை தப்பிக்க வைத்தமை மற்றும் கொடிகாமம் பொலிஸார் இருவரை நேற்று (15) அப்பகுதியினைச் சேர்ந்த சிலர் தாக்க முற்பட்ட காரணங்களினாலேயே இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி...

கொடிகாமத்தில், பொலிஸாரை தாக்க முயற்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .