2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் நால்வர் மலேரியா நோய்க்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் கடந்த 02 மாதங்களில் 04 பேர் மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ். மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயகுமார்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வந்த 03 பேரும்  தென் ஆபிரிக்காவிலிருந்து வந்த ஒருவருமே மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஐயப்ப சுவாமி விரதத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலிருந்து  இந்தியாவுக்கு அதிக அடியார்கள் பயணம் மேற்கொள்கின்றனர். சிலர் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இந்தியா செல்கின்றனர்.

தற்போது இந்தியாவில் மலேரியா நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அங்கிருந்து இலங்கைக்கு வருபவர்களும் மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து இந்தியா செல்பவர்கள் தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மருந்தை பெற்றுச் செல்ல முடியும்.

மலேரியா தடுப்பு மருந்தை முன்னேற்பாடாக பெற்றுச்  செல்வதன் மூலம் மலேரியாவிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், மலேரியா நோய் பரவுவதையும் தடுக்க முடியும் எனவும் அவர்  தெரிவித்தார்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .