2025 ஜூன் 25, புதன்கிழமை

தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை சங்கங்களும் கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்,எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்கள் இன்று ஆறாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நோயாளிகள் எதிர்நோக்கும் சிரமங்களையும் கருத்தில் கொண்டும் நிறைவு காண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்ரீலங்கா ஜனராஜ சௌக்கிய சுகாதார சங்கத்தின் யாழ். கிளையின் சிற்றூழியர்களும் இணைந்து ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த வெள்ளிக்கிழமை (13) முதல் பணிப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையான ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தினை குறித்த உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்களும் முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தில் மருந்துவர்களும் தாதியர்களும் இணைந்து தற்காலிக தொண்டர் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .