2025 ஜூன் 25, புதன்கிழமை

பாடல் இசைத்த ஐஸ்கிறீம் வானுக்கு தண்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

யாழ். நீதிமன்றத்திற்கு முன்னால் ஐஸ்கிறீம் வானில் பாடலை ஒலிக்கவிட்டபடி சென்றவருக்கு  யாழ்.நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (19) நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மேற்படி ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வான் பாடலை ஒலிப்பியபடி சென்று கொண்டிருந்தது.

 மேற்படி வானை கைப்பற்றுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டதிற்கமைய பொலிஸார் வானைக் கைப்பற்றியதுடன் அதன் உரிமையாளரை கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, குறித்த நபருக்கு 1500 ரூபா தண்டம் விதித்த நீதவான், இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .