2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 28 வயதுடைய இளைஞரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். உரும்பிராய் கிழக்கு பகுதியினைச் சேர்ந்த மேற்படி இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் பெற்றோரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் மேற்படி இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் காதல் வயப்பட்டு சிறுமிகள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .