2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆளுநரால் நாக விகாரைக்கு பொருட்கள் அன்பளிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். நாக விகாரையின் கட்டிட நிர்மாண பணிகளுக்காக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் கட்டிடப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான கட்டிடப்பொருட்கள் ஆளநரினால் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். நாக விகாரையில் சனிக்கிழமை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து யாழ். நாக விகாரையின் விகாராதிபதியிடம் இந்த பொருட்களை ஆளுநர் கையளித்தார்.

யாழ். நாக விகாரையில் கட்டிட நிர்மாண பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு உதவி வழங்குமாறு விகாராதிபதியினால் ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே, ஆளுநர் நிதியில் இருந்து ஐந்து லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .