2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் மற்றுமொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு  மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து சம்பவித்தது.

யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தரான சி.சர்வானந்தன் (வயது 34), இராணுவச் சிப்பாயான  ஜி.ஜி.எம்.கங்கொடகெதர (வயது 21) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். மல்லாகம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள மதுவரித் திணைக்களத்திற்கு முன்பாக ரோந்து சென்றுகொண்டிருந்த இராணுவச் சிப்பாயின் சைக்கிளுடன்  எதிரே வந்த  மோட்டார் சைக்கிள்  மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .