2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் மர்மப்பொருள் வெடிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எஸ்.ஜெகநாதன்

யாழ்., ஏழாலைப் பகுதியில் குப்பையினை எரித்த போது அதனுள் இருந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. யாழ்., ஏழாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று (30) தனது காணியிலுள்ள பாழடைந்த கிணற்றினை துப்புரவு செய்தார்.

அதனுள் இருந்த குப்பைகளை வெளியில் எடுத்து எரித்த போது அதற்குள்ளிருந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்த சுன்னாகம் பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .