2025 ஜூன் 25, புதன்கிழமை

வடகடல் நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் 2014 ஆம் ஆண்டில் நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, வடகடல் நிறுவனத்தை இலாபகரமான முறையில் எவ்வாறு முன்னெடுப்பது, கடற்றொழிலாளர்கள் மத்தியில் வடகடல் நிறுவனத்தின் வலைகள் தொடர்பில் விழிப்புணர்வுகளை விரிவாக்குவது, கடற்றொழில் சார்ந்த முக்கிய இடங்களில் நிறுவனத்தின் விற்பனைக் கூடங்களை ஆரம்பிப்பது, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உற்பத்திகள் வழங்குவதை மேலும் பரவலாக்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

தரம் குறைந்த மீன்பிடி வலைகள் மலிவாகக் கிடைக்கக் கூடிய விற்பனைச் சந்தையில் வடகடல் நிறுவன வலைகளை தரம் கூடியதாக உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .