2025 ஜூன் 25, புதன்கிழமை

முச்சக்கர வண்டியில் வாள்களுடன் பயணித்த மூவருக்கு பிணை

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வாள்களுடன் முச்சக்கர வண்டியில் சென்ற குற்றச்சாட்டில் கைதான மூவரையும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். கோண்டாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) முச்சக்கரவண்டியொன்றினை சோதனையிட்ட கோப்பாய் பொலிஸார், அதிலிருந்து வாள்களைக் கைப்பற்றியதுடன் அவ்வண்டியில் பயணித்த மூவரையும் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் திங்கட்கிழமை (30) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுததப்பட்டபோதே நீதவான் மேற்படி மூவரையும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .