2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தில் விசாரணை

Super User   / 2013 டிசெம்பர் 31 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், எஸ்.ஜெகநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று மதியம் 1.00 மணியளவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. திணைக்களத்தின் அதிகாரி ரணவீர தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவொன்றினாலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யார் யாருடன் சந்திப்புக்களை மேற்கொண்டார், எங்கு எல்லாம் சென்றார் என்ற ரீதியிலே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறிதரன் எம்.பி. உறுதிப்படுத்தினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .