2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் தாயும் சிசுவும் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஆனையிறவுப் பகுதியில் ஏ – 9 வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தாயும் சிசுவும்  மரணமடைந்துள்ள அதேவேளை, தந்தை காயமடைந்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே, இவர்கள் விபத்திற்கு உள்ளானார்கள்.

இவர்கள் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (வயது 22), செந்தூரன் கின்சிலி (பிறந்து 27 நாட்கள்) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .