2025 ஜூன் 25, புதன்கிழமை

கண்ணிவெடியில் சிக்கி கால் இழந்த பெண்

Kanagaraj   / 2014 ஜனவரி 01 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கிருஸ்ணன்

யாழ்.எழுதுமட்டுவாள் ஒட்டவெளி பகுதியில் கண்ணிவெடியில் சிக்கிய பெண் ஒருவர் தனது காலொன்றை இழந்துள்ளார்.

அதே பகுதியினைச் சேர்ந்த சந்திரசேகரம் புஸ்பமலர் (35) என்ற குடும்பப் பெண்ணே விறகு எடுப்பதற்காக இன்று புதன்கிழமை பிற்பகல் காணியொன்றிற்குள் சென்றவேளையிலேயே கண்ணிவெடியில் சிக்கியுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கன்னிவெடிகள் அகற்றப்பட்டு, அங்கு மீளக்குடியமர அண்மையிலேயே அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.            

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .