2025 ஜூன் 25, புதன்கிழமை

உ/த பரீட்சையில் அதிவிசேட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 02 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில்  அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்ததுடன் காசோலை பரிசில்களையும்  வழங்கினார்.

அத்துடன், வடமாகாண அரசதிணைக்களங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 98 சாரதிகளுக்கு நியமனக் கடிதங்களையும் இந்நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.

மற்றும் ஈச்சமோட்டை ஞானவைரவர் ஆலய பூசகருக்கு 50 ஆயிரம் ரூபா காசோலையையும் ஆலயத்திற்கு தேவையான தீபம் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கிவைத்தார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .