2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி: இளைஞனுக்கு விளக்கமறியலில்

Kanagaraj   / 2014 ஜனவரி 02 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கல்வியங்காட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயோதிபரை மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். மோதிய இளைஞர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த விபத்தில் இணுவில் மேற்கினைச் சேர்ந்த சந்திரகுமார் யோகநாதன் (61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காடு பகுதியில் நேற்று (01) சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயோதிபரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுத் தப்பிச் சென்றது. இதில் வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து பொதுமக்கள் வழங்கிய மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டு இலக்கத்தினை வைத்து பாiஷயூர் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று (02) கைது செய்தனர்.

தொடர்ந்து மேற்படி நபரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் மேற்படி நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .