2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழ்.நகரத்தில் காணாமற்போன மோட்டார் சைக்கிள் கோப்பாயில் மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 02 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.பெரிய கடைச் சந்தைப் பகுதியில் காணாமற்போன மோட்டார் சைக்கிள் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு முன்னால் அநாதரவான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.பெரிய கடை சந்தைக்கு நேற்று (01) வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளினை தரித்து விட்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, தரித்து நின்ற மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில், இன்று (02) கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கும் முன்னால் அநாதரவான நிலையில் நின்ற மேற்படி மோட்டார் சைக்கிளினை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து மேற்படி மோட்டார் சைக்கிளினை நீதிமன்றத்தின் மூலம் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .