2025 ஜூன் 25, புதன்கிழமை

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மல்வம் பொதுச்சந்தை திறப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நிதியில் புனரமைக்கப்பட்ட மல்வம் பொதுச்சந்தை செவ்வாய்க்கிழமை சபையின் தவிசாளர் தி.பிரகாஸினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டு வரவு –செலவுத் திட்டத்தில் மேலதிக வருமானத்தில் ஒதுக்கப்பட்ட 7 இலட்சம் ரூபா நிதி செலவில் இச்சந்தை புனரமைக்கப்பட்டது.

இச்சந்தையில், மாட்டிறைச்சிக்கடை, மீன், மரக்கறி விற்பனைப் பகுதி போன்றவற்றிற்குத் தனித்தனியாக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சந்தையினை உடுவில் மல்வம் ஞானப்பிரகாசர் சனசமூக நிலையத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக பிரதேச சபையிடமிருந்து குத்தகைக்குப் பெற்று நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் ஞானப்பிரகாசர் சனசமூக நிலையத் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .