2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் பறவைகள் களவாய்வு முகாம்

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். குடாநாட்டிலுள்ள "பறவைகள் பற்றி களவாய்வு" எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையும் நடத்தப்படவுள்ளதாக யாழ்.சிறுவர் மகிழ்வக உதவி இயக்குனர் ஸ்ரீ.கஜேந்திரன் தெரிவித்தார்.

கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியர் சரத் கொடகமவின் வழிகாட்டலின் கீழ் கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல்துறை களப்பறவையியல் குழுவினால் இந்த களவாய்வு மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

இந்தக் பறவைகள் களவாய்வு யாழ்.மாவட்ட கரையோரங்கள் மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட இடங்களில் இடம்பெறவுள்ளன.

இலங்கைக்குரித்தான பறவைகள், குடிப்பெயர்வு, குடிவரவு பறவைகள், பறவைகளின் இனங்கள் போன்றவை இந்த ஆய்வு மூலம் அடையாளம் காணப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி களப்பறவை ஆய்வு ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அண்மையில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை களப்பறவையியல் குழு, யாழ். சிறுவர் மகிழ்வகம், தொண்;டமனாறு வெளிக்கள நிலையம் ஆகியன இணைந்து யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே இயற்கை விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் 'இயற்கை ஊக்குவித்தல் கழகம்' அமைத்து செயற்பட்டு வருவதாக உதவி இயக்குநர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .