2025 ஜூன் 25, புதன்கிழமை

த.தே.கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டும்: ஹத்துருசிங்க

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாணசபைத் தேர்தலில் அதிகமான ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்லதொரு முடிவை எட்ட வேண்டும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

மஹிந்த ஹத்துருசிங்க கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் செல்வதினால், அவருக்கு பிரியாவிடை அளிக்கும்  நிகழ்வு வசாவிளானிலுள்ள இராணுவ அலுவலர்கள் கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற துன்ப, துயரங்களை நான் நன்கு அறிவேன். அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவர் கூறினார்.

இதில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடந்த காலத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஒரு பிரச்சினை ஏற்படுமாக இருந்தால், யாழ்ப்பாணம்; மட்டுமல்ல தென்பகுதியும் இதனால் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எனவே,  எதையும் நாம் சமாதானமாகப்; பேசி நல்லதொரு தீர்வை  எட்ட வேண்டும் எனவும் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இதுவரை காலமும் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாக செயற்பட்ட  மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .