2025 ஜூன் 25, புதன்கிழமை

இளைஞர்கள் மீது வாள்வெட்டு; ஒருவர் விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜனவரி 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வசாவிளான் கோணாவளைப் பகுதியிலுள்ள பிரார்த்தனை மண்டபத்திற்கு முன்னால் நின்றிருந்த இளைஞர்கள் மீது இரண்டாம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான ஈவினை கெலனியைச் சேர்ந்த தேவராசா சிந்துஜன் (25) என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மல்லாகம நீதவான் வாசஸ்தலத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுத் தாக்குதலில் வசாவிளான் செல்வநாயகபுரம் பகுதியினைச் சேர்ந்த அறுவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .