2025 ஜூன் 25, புதன்கிழமை

'ஆவா' குழுவினருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 08 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், செல்வநாயகம் கபிலன்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 'ஆவா' குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று (07) உத்தரவிட்டார்.

யாழ். மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்ற கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களுடன் தொடர்புடைய 9பேர் கொண்ட 'ஆவா' குழு நேற்று முன்தினம் (06) கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர், நேற்று (07) மாலை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என்று கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .