2025 ஜூன் 25, புதன்கிழமை

இளவாலையிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 08 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கபிலன் செல்வநாயகம்

யாழ். இளவாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகள் உள்ளிட்ட 97,800 ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக  அவ்வீட்டு உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.நிக்கபிட்டிய  தெரிவித்தார்.

குறித்த வீட்டு உரிமையாளரான விக்னேஸ்வரன் ராசியம்மா (வயது 68) ஆகிய தான்  கொழும்பிலுள்ள மகளின் வீட்டிற்கு கடந்த டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி சென்று நேற்று செவ்வாய்க்கிழமை தனது வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு சங்கிலி, கைச்சங்கிலி, தோடு, 02 மணிக்கூடுகள் உட்பட  பொருட்கள் திருட்டுப்போயுள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும்  அவர் கூறினார்.  

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை இளைவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .