2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பட்டிப்பொங்கலன்று பளைவரை ரயில் ஓட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 10 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும்  வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து  யாழ்ப்பாணம்வரையான ரயில் பாதை புனரமைப்புக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்திருந்தது. 

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிவரையான ரயில் சேவையை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மீதி இடங்களுக்கான ரயில் பாதை புனரமைக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது எழுதுமட்டுவாள்வரை முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .