2025 ஜூன் 25, புதன்கிழமை

பெண் கான்ஸ்டபிளுக்கு அந்தரங்கத்தை காட்டியவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு தனது அந்தரங்கத்தை காட்டியவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

பொலிஸ் விடுதியிலிருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வீதியில் நின்றிருந்த நபர் தனது அந்தரங்கத்தை காட்டியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தான் இராணுவப் புலனாய்வாளர் என்று தன்னை அடையாளப்படுத்தியதாக தெரிவித்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .