2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் மரணம்

Kanagaraj   / 2014 ஜனவரி 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிளிநொச்சியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைபெற்றுவந்த குருநகர் பகுதி கடற்கரை வீதியைச் சேர்ந்த யேசுதாசன் கில்பர் நிக்ஷன் (வயது 42)குடும்பஸ்தர்  இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.


கிளிநொச்சி பகுதியில் இரு முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

குறித்த குடும்பஸ்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .